HAPPY CHRISTMAS!

Wednesday, December 23, 2009




2004.12.26 உலகத்தையே கதிகலங்க வைத்த துயரமான நிகழ்வு என் வாழ்க்கையையும் பெரிதும் பாதித்தது .எனது கிராமம் அழகிய கடல்வளமும் ஆறும் ஒருங்கே சேர்ந்து இயற்கை வளங்களும் நிறைந்து அனைவரும் ஒற்றுமையாக வாழும் ஒரு சிறிய கிராமம் ஆகும்.இங்கு தமிழர் பறங்கியர் மற்றும் சிங்கள முஸ்லிம் இனத்தவரும் உள்ளனர்.இந்து சமயத்தினையும் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் அநேகமானவர்கள்.இங்கு ச்ரிஷ்மஸ் என்றால் எல்லோருக்கும் கொண்டடம்தான்.,இதற்கு நாள் குறித்து விடுவோம்.24m திகதி யானதும் கிரிஷ்மஷ்சினை வரவேத்பதட்காக எல்லா இளைனர்களும் சேர்ந்து விடிய விடிய நடன நிகழ்சி வைத்து அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
இவ்வாறே 25m திகதி இரவு முழுதாக எல்லோரும் என்றுமே இல்லாத அளவுக்கு சந்தோசமாக இருந்தோம்.வாழ்கையின் கடைசி நாள் இதுதான் என்று புரியாமல் இன்பமாக பலர் கொண்டாடினர்.
நாங்கள் வழமையாக கடற்கரையிலே ஒன்று சேர்வது வழமை .அன்றும் வழமையாக எமது கடற்கரை மண்ணிலே அனைத்து நண்பர்களும் ஒன்று சேர்ந்து இதனை கொண்டாடினோம்.அன்றைய நாள் சந்தோசமாக கழிந்தது.26 அதிகாலை இரண்டு மணியளவில் வீட்டிக்கு சென்று நித்திரை கொண்டோம்.காலை எட்டு மணி போல எழும்பி முகம் கழுவி விட்டு அம்மா பிட்டு சாப்பிட சொன்னாங்க.நானும் சாப்பிடுத்து வழமையாக டிவி பார்ப்பது வழக்கம்.அன்றும் டிவி போடு ஒரு பாடுத்தான் பார்த்தேன்.கரண்ட் நின்று விட்டது.எனது அத்தான் கடல் தொழில் செய்பவர்.காலையில் நேரத்தோடு கடலுக்கு சென்று விடுவார்.அன்றும் நேரத்தோடு சென்றார்.அவர் கடல் வருவதை பார்த்து எமது வீதியால் சத்தம் போடு கொண்டு வந்தார்.என்னடா அத்தான் சத்தம் போடுகிறார் என்று வெளியே சென்று பார்த்தேன்.என்னத்தைப் பார்ப்பது கடல் பொங்கி வருவதைக் கண்டு ஆசரியம் அடைந்து அம்மா ஓடி வாங்க என்று எனது தந்தையையும் அம்மாவையும் கையோடு பிடித்துக் கொண்டு எந்த வித உடுப்பையும் எடுக்காமல் வெறும் மேலோடு ஓடினேன்.கடல் எங்களுக்கு பின்பே வந்து கொண்டு இருந்தது.இதகு மேல ஓட முடியாது இனி கடவுள்தான் பொறுப்பு என்று சொல்லி ஒரு வீட்டின் மேல் மாடியில் ஏறினோம் .ஏறி நின்று பார்த்தால் பக்கத்து வீட்டிக்கு மேலாக பிணங்கள் மிதந்து வருவதைக் கண்டு அலறினோம்.
ஒரு மாதிரியாக தண்ணீர் குறைவதைக் கண்டு இறங்கி ஒரு வாகனத்தில் ஏறி எல்லோரும் ஒதுங்கி நிற்கும் பாடசாலை ஒன்றுக்கு சென்றோம்.எங்கும் அளறல் சத்தமாகத்தான் இருந்தது.எனது தம்பி அவன் என்னை விட்டு பிரிந்தது இல்லை.அவன் எப்பொழுதும் என் மடியில்தான் சாயிந்து கொள்ளுவான்.அவன் இறந்த செய்தி அறிந்து என்னால் எனது உயிரையே பறித்துப் போனது போல தாங்க முடியாமல் தவித்தேன்.அவன் எனது அப்பாவின் தம்பியின் மகன் .முகத்துவாரம் என்ற பக்கத்து கிராமத்தை சேர்ந்தவன்.நான்தான் அவனை படிப்பிப்பது.அவனது உறவினர்கள் 20 பேர் இறந்தனர்.அத்துடன் என்னுடன் பழகிய நண்பர்களும்,நண்பிகள் சிலரும் இதில் இறந்தனர்,நானும் எனது குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த சோகத்தினை தாங்க முடியாமல் தவித்தோம்.எனது பல்கலைக்கழக நண்பர்கள்தான் எனது குடும்பத்தினையும் எனது உறவுகளையும் நண்பர்களையும் ஆறுதல் படுத்தி துணிகள் சாப்பாடு போன்றவைகளை தந்து எங்களுக்கு பக்கபலமாக நின்றார்கள்.
எம்மை விட்டு எத்தனை வருடம் ஆனாலும் அன் நிகழ்வுகள் எமதுமனதை விட்டு அகல முடியாது.

No comments:

Post a Comment